Wednesday, April 28, 2010

காணாமல்போன ஊடகவியலாளர் சட்டத்திற்குப் புறம்பாக தடுத்து வைப்பு


கொழும்பில் காணாமல் போயிருந்த இணையத்தளத்தின் ஊடகவியலாளரான பிரகீத் எக்னிலிகொட சிறீலங்கா புலனாய்வாளர்களால் சட்டத்திற்குப் புறம்பாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பிரகீத்தின் மனைவி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 24ஆம் நாள் காணாமல் போயிருந்த இவர் தொடர்பாக இதுவரை எந்தவித தகவலும் தெரியவராத நிலையில், இன்று கொழும்பில் இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையில் பிரகீத்தின் மனைவி இந்தத் தகவலை வெளியிட்டார்.

சிறீலங்கா புலனாய்வுத்துறை மற்றும் காவல்துறைக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 10ஆம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment