Thursday, April 29, 2010

யாழ். பொது நூலகம் கணனி மயம்; வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு




ஏனைய பொது நூலகங்களுடன் தக வல்களை பரிமாற்றங்களை இலகுவாக மேற்கொள்ளும் வகையில் யாழ். பொது நூலகம் முழுமையாக கணனி மயப் படுத்தப்படவுள்ளது என வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
தகவல் பரிமாற்றங்களை இலகுவாக மேற்கொள்ளும் வகையில் யாழ். நூலகம் தொடர்புபடுத்தப்படவுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்திற்கு அமைய யாழ். பொது நூலகத்தை முழுமையாக கணனி மயப்படுத்தவும், மேலும் நவீன மயப்படுத்தவும் தேவை யான சகல வசதிகளையும் அரசு மேற் கொண்டுள்ளது.
புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இந்த நூலகம் 2003 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி மீண்டும் திறந்து வைக் கப்பட்டது. கூடிய தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில் கணினி மயப்படுத் தப்படவுள்ளதுடன் சிறுவர் பகுதியும் அவர்களுக்கு ஏற்றவகையில் கணனி மயப்படுத்தப்படவுள்ளது என்றும் மாநாட் டில் அவர் கூறினார்.

No comments:

Post a Comment