Wednesday, April 28, 2010

வடமராட்சியில் கடத்தலில் ஈடுபட்ட தம்பதியர் இருவர் கைது


கடந்த சனிக்கிழமை வடமராட்சி பகுதியில் பொலிகண்டியை சேர்ந்த 24 அகவையுடைய பெண் ஒருவர் துன்னாலையில் உள்ள உறவினர் வீடுக்கு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தபோது அவரை வெள்ளை வானில் சென்றோர் கடத்தி சென்றுள்ளனர்.

கடத்திச் சென்ற இவர்கள் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்ததாகவும் அவர் மயக்கமடைந்தபோது அவர் இறந்துள்ளார் என கருதி அவரை புதரருகே வீசிவிட்டு சென்றதாகவும் பின்னர் மறுநாள் அவர் கண்விழுத்து எழுந்து வீட்டுக்கு சென்று நடந்ததை தெரிவித்து பொலிசாருக்கு தெரிவித்ததாகவும் பின்னர் காவல்துறையினர் அவர்களை கைது செய்ததாகவும் அறியமுடிகிறது.

இவ்வாறு கடத்தலில் ஈடுபட்டவர்கள் தம்பதிகள் எனவும் அவர்கள் முறை;ப்படி திருமணம் செய்யவில்லை எனவும் இவர்களின் வீட்டில் இருந்து மிதிவண்டியும் நகைகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

No comments:

Post a Comment