Thursday, April 22, 2010

யுத்தம் முடிந்தும் நாட்டில் சமாதானம் நிலவுவதாகக் கருத முடியாது : நாடாளுமன்றில் சம்பந்தன்





நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை நாம் வரவேற்கின்றோம். எனினும் யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் சமாதானம் ஏற்பட்டுவிட்டது எனக் கருத முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கையின் ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நாட்டில் வசிக்கின்ற சகல மக்களுக்கும் நீதியும் நியாயமும் கிடைக்கக் கூடிய வகையில் இந்த நாடாளுமன்றம் அளப்பரிய பணியொன்றை ஆற்ற வேண்டியுள்ளது" என அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment