Sunday, April 18, 2010

சென்னை அணியின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தார் டோனி


-ஐபிஎல் போட்டியில் தனது கடைசி லீக் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது சென்னை அணி.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அணி தலைவர் டோனி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.

இதன் படி பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பில் யுவராஜ் சிங் 01, ஜயவர்த்தன 21 , சங்கக்கார33, மார்ஷ் 88, இர்பான் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு 193 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 19.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 எடுத்து வெற்றி பெற்றது.

சென்னை அணி சார்பில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான ஹெய்டன் 5 , முரளி விஜய் 13, ரெய்னா 46 , டோனி 53 ஓட்டங்களையும் பெற்றனர்.

நேற்றைய போட்டியில் இறுதி மூன்று ஓவர்கள் பரபரப்பாக அமைந்தன. 18 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பெற்றால் சென்னை அணிக்கு வெற்றி என்ற நிலை இருந்தது.

18 ஆவது ஓவரில் டோனி அடித்த 2 நான்கு ஓட்டங்களின் உதவியுடன் 15 ஓட்டங்கள் கிடைத்தன. 19ஆவது ஓவரில் 13 ஓட்டங்கள் பெறப்பட்டன. இதனால் 6 பந்துகளில் 16 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் சென்னை அணி இருந்தது.

இறுதி நான்கு பந்துகளில் வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட்டன. 3,4ஆவது பந்தை எதிர்கொண்ட டோனி அந்த பந்தை இரண்டு ஆறு ஓட்டங்களாக்கினார். இதன் மூலம் 2 பந்துகள் மீதம் இருக்கையில் சென்னை அணி 195 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக சென்னை அணியின் தலைவர் டோனி தெரிவு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment