Monday, April 26, 2010

வவுனியா திருநாவற்குளம் மாணவியைக் கொன்றது புளொட்

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் சிறுமி கொலையுடன் தொடர்புடையவர்கள் புளொட் அமைப்பினர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் கடந்தவாரம் தாயையும் சிறுமியையும் கத்தியால் குத்திவிட்டு நகைகள் பணம் உட்பட்ட பொருட்களைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் புளொட் அமைப்பைச் சேர்ந்த தாசன், கிரி, குரு ஆகிய நீண்ட கால உறுப்பினர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்தே புளொட் அமைப்பினர் சம்பவத்துடன் தொடர்புபட்டமை தொடர்பிலான தகவல்கள் தெரியவந்துள்ளன.இதேவேளை புளொட் அமைப்பினைச் சேர்ந்த மேலும் இருவரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்வதாக வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தியும் சம்பவம் நடைபெற்ற வீட்டுக்கு அருகில் உள்ள புதல் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகிய 9 வயதுடைய சிறுமி மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் போது கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்த ஆசிரியையான சிறுமியின் தாயார் தொடர்ந்தும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றார்.

No comments:

Post a Comment