Thursday, April 29, 2010

வடக்கின் விமான, துறைமுக சேவைகளை அபிவிருத்தி செய்ய இந்தியா ஆர்வம்! தூதர் அசோக் காந்த் தகவல்



வடக்கின் விமான மற்றும் துறைமுக சேவைகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு, ஏப். 30
வடக்கின் விமான மற்றும் துறைமுக சேவைகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத் தளங்களை புனரமைத்தல் மற்றும் துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கப்படும் என இந்தியா அறி வித்துள்ளது.
பிரதமர் டி.எம்.ஜயரட்னவுடன் நடந்த சந்திப்பின்போது இலங்கைக்கான இந் தியத் தூதர் அசோக் காந்த் இத்தகவலைத் தெரிவித்தார்.
குறிப்பாக பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகி யவற்றை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.
புதிய பிரதமருக்கு வாழ்த்துத் தெரிவிக் கும் நோக்கில் அசோக் காந்த், பிரதமர் அலுவலகத்திற்கு நேற்று விஜயம் செய் துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் தற் போது காணப்படும் உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment