இலங்கையில் பரந்துபட்ட மனித உரிமை மீறல்களுக்குக் காரண மாக அமைந்துள்ளது என உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சுட்டிக் காட்டப்பட்டுவரும் அவசரகால சட்டத்தைத் தளர்த்துவது குறித்து அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது என புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் நேற்று முதல்தடவையாக ஊடகவியலாளர்களை சந்தித்தவேளையே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிவிலியன்களைக் கைது செய்வதற்கும் தடுத்து வைப்பதற்கு மான அளவுக்கதிகமான அதிகாரங்களைப் பாதுகாப்புப் படை யினருக்கு வழங்கியுள்ள அவசர காலச் சட்டத்தைத் தளர்த்துவது குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
அவசரகாலச் சட்டத்தைத் தளர்த்துவது குறித்து அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.
எனினும் இதற்கான கால எல்லை எதனையும் நாங்கள் தீர்மானிக்கவில்லை. சூழ்நிலைகள் மாற்றமடைந்துள்ளன.
நாட்டின் பாதுகாப்பு நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமையைத் தொடர்ந்து, யுத்த காலத்தில் நடைமுறைப்படுத்திய பாதுகாப்பு நடைமுறைகள் சிலவற்றை அரசு படிப்படியாகத் தளர்த்தும்.
பாதுகாப்பிற்கும் சுதந்திரத்திற்கும் இடையில் சமநிலையைப் பேணுவதற்காகவே இதனைச் செய்கிறோம். இது சரியான விடயம் என்பதால் இதனை முன்னெடுக்கவுள்ளோம்.
வெளியுலக அழுத்தங்கள் காரணமாக இதனை நாம் முன்னெடுக்கவில்லை.
இதேவேளை, இவ்வாரம் பூட்டானில் இடம்பெறவுள்ள "சார்க்' உச்சிமாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சுகளை மேற்கொள்வார்.
இந்தச் சந்திப்பின் போது யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையில் நிலைமையை முன்னேற்றுவதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்துவார்.
இலங்கை குறித்து இந்தியப் பிரதமர் தெரிவிக்கும் கரிசனைகளை ஜனாதிபதி கவனத்துடன் செவிமடுப்பார்.
இலங்கையின் மனித உரிமை நிலைவரம் குறித்த சர்வதேச சமூகம் தெரிவித்துள்ள கரிசனைகளுக்குத் தீர்வு காணவுள்ளோம் என்றார் புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்
Sunday, April 25, 2010
அவசர காலச் சட்ட விதிகளை தளர்த்துவது குறித்துப் பரிசீலணை அரசு தீவிரமாக ஆராய்கிறது என்கிறார் ஜி.எல்.பீரிஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment