Tuesday, April 20, 2010

யாழில் இளம்பெண் கடத்தப்பட்டு பாலீயல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்


கடந்த திங்கட்கிழமை யாழ்பாணம் சுன்னாகம் பகுதியில் இளம் பெண் ஒருவரை இரு இளைஞர்கள் கடத்தி பாலீயல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த அப்பெண் தனது உறவினரை பார்ப்பதற்காக யாழ்வந்தபோதே இவ்வாறு கடத்தப்பட்டு திங்கட்கிழமை இரவு பாலீயல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் இவர் செவ்வாய் காலை ஒருவாறு அங்கிருந்து தப்பி வந்ததாகவும் அயலவர்களிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

அக்குறித்த இளம்பெண்ணிடம் இருந்து பறித்த கைத்தொலைபேசியை வைத்திருந்த நபர் மூலம் அவரை இனம் கண்டு இருவரையும் மடக்கி பிடித்த அயலவர்கள் இவ் இரு இளைஞருக்கும் நையப்புடைத்து தகுந்த பாடம் படிப்பித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாகவும் அவர்கள் தற்போது காவல்துறையினரின் கண்காணிப்பில் யாழ் ஆசிரியர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறியமுடிகிறது.

24 அகவையுடைய இப்பெண் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து குடும்பத்தினருடன் வவுனியா தடுப்பு முகாமில் தங்கியிருந்தவர் என்பதுவும் தற்போது யாழ் ஆசிரியர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.

No comments:

Post a Comment