Monday, April 26, 2010

வவுனியாவில் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் மீட்பு



வவுனியாவில் வைத்துக் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த சனியன்று வவு னியா வைத்தியசாலைக்குச் செல்லும்போது கடத்தப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலி ஸார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், வவுனியாவிலுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கைதுசெய்யப்பட்ட குறித்த உறுப்பினர் வழங்கிய தகவலையடுத்தே, மேற்படி கடத்தப்பட்டிருந்த நபர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment