Wednesday, April 28, 2010

ஈபிடிபியின் மற்றொர கடத்தல் சம்பவம் அம்பலம்: வவுனியாவில் சம்பவம்


கடந்த 24 ம் திகதி வவுனியா பொது மருத்துவமனைக்கு மருந்தெடுக்க சென்றபோது தம்பிராச ஜெயந்தன் என்பவர் இனம்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டிருந்தமை தெரிந்ததே.

இவரை விடுவிப்பதற்கு கப்பமாக பணம் கோரியிருந்தமையும் தெரிந்ததே. இதன்படி சிவில் உடையில் பணத்துடன் சென்ற காவல்துறையினர் இக்கடத்தலின் சூத்திரதாரி ஈபிடிபி தீபனை வவுனியா குட்செட்வீதியில் அமைந்துள்ள ஈபிடிபி அலுவலகத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

இவர் வழங்கிய தகவலின் படி தற்போது காவல்துறையினர் மன்னார் மாவட்ட ஈபிடிபி பொறுப்பாளரை லிங்கேசை தேடிவருவதாக தெரியவருகிறது.

இவர்களுடன் ஒரு குழு இவ்வாறான ஆட்கடத்தல் கப்பம் பெறுவதில் ஈடபடுவதாகவும் இவர்கள் சிறீலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இணைந்தும ;செயற்படுவதாகவும் தெரியவருகிறது.

எனினும் இச்செயல் வெளிச்சத்திற்கு வந்ததும் ஈபிடிபியினர் வழக்கம்போல இவர் தமது உறுப்பினர் அல்ல எனவும் காவல்துறையினர் தன்னை பிடிக்கவருவதாகவும் தனக்கு அமைக்கலம் வழங்குமாறு கோரியிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment