Wednesday, April 28, 2010

வவுனியா திருநாவற்குளம் கொலை சந்தேக நபர் மரணம்


வவுனியா திருநாவற்குளம் பிரதேச வீடொன்றினுள் கடந்த 20 ம் திகதி நுழைந்த தாஸ் எனும் கொள்ளையன் உட்பட்ட கொள்ளையர்கள் அங்கிரந்த பணம், நகைபோன்றவற்றை கொள்ளையிட்டதோடு மாத்திரமல்லாது ஒன்பது வயது சிறுமியையும் குத்து கொலை செய்துதிருந்தமை தெரிந்ததே.

இதன்போது இவரது தாயாரும் மற்றொரு சகோதரனும் காயமடைந்திருந்தமை தெரிந்ததே. இதுதொடர்பில் காவல்துறையினர் தாஸ் மற்றும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்திருந்தார்கள்.

இவர்களில் முக்கிய சந்தேக நபரான தாஸ் என்பவர் குளத்தில் விழுந்து மரணமானதாக ஒரு தகவலும், தப்பி ஓட முற்பட்டபோது சுட்டுக்கொன்றதாக மற்றொரு தகவலும் கிடைத்துள்ளது.

இவரது உடலம் கல்மடு குளத்தில் இன்று சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது. ஆயுதம் மறைத்து வைத்த இடம் ஒன்றினை காட்டுவதற்காக அழைத்து செல்லப்பட்டபின் இவர் இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டதாக தெரியவருகிறது.

இவ்வாறு இறந்த தாஸ் என்பவர் புளொட் உறுப்பினர் எனவும் புலனாய்வு பிரிவினருடன் இயங்கி வருவதாகவும் அயற்கிராமங்களில் இவர் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

No comments:

Post a Comment