Thursday, April 29, 2010

புத்தர் சிலை விவகாரம் சூடு பிடித்து மாநகர சபைக் கூட்டத்தில் அமளி!



யாழ். பிரதான வீதியில் புத்தர் சிலை அமைப்பது தொடர்பான விவகாரத்தால் மாநகரசபையின் மாதாந்தக் கூட்டத்தில் மூன்று மணி நேரமாக அமளிதுமளி தொடர்ந்தது. இறுதியில் கூட்டம் இடை நிறுத்தப்பட்டது. மாநகர முதல்வர் திருமதி யோகேஸ் வரி பற்குணராஜா தலைமையில் சபை யின் மாதாந்தக்


யாழ்ப்பாணம்,ஏப்.30
யாழ். பிரதான வீதியில் புத்தர் சிலை அமைப்பது தொடர்பான விவகாரத்தால் மாநகரசபையின் மாதாந்தக் கூட்டத்தில் மூன்று மணி நேரமாக அமளிதுமளி தொடர்ந்தது. இறுதியில் கூட்டம் இடை நிறுத்தப்பட்டது.
மாநகர முதல்வர் திருமதி யோகேஸ் வரி பற்குணராஜா தலைமையில் சபை யின் மாதாந்தக் கூட்டம் நேற்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமானது.
கூட்ட ஆரம்பத்தில் கூட்ட நிகழ்ச்சி நிரலை முதல்வர் வாசித்த போது, எதிர்க் கட்சித் தலைவர் மு.றெமிடியஸ் தெரி வித்த ஆட்சேபத்தை அடுத்து இரு தரப்புக்
களுக்கும் இடையில் தர்க்கம் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன.
தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் நீடித்த களேபரத்தால் சபையின் நிகழ்ச் சிகளைத் தொடர முடியாத நிலையில் கூட்டம் இடை நிறுத்தப்பட்டது.
நேற்றைய கூட்ட ஆரம்பத்தில் முதல் வர் வாசித்த நிகழ்ச்சி நிரலின் 12 ஆவது விடயத்தில் முன் அறிவித்தபடி, கௌரவ உறுப்பினர் அ.கிளபோடாசியஸ் பின்வ ரும் பிரேரணையைப் பிரேரிப்பார் எனத் தெரிவித்து "பிரதான வீதியில் புத்தர் சிலை வைக்க எண்ணியுள்ள இடத்தில் வீதிக் குறியீடுகள் பொருத்த சபை தீர்மானிக் கிறது' என்று குறிப்பிடப்படுகிறது எனக் கூறியதும் தர்க்கம் ஆரம்பித்தன.
அந்த இடத்தில் யார் புத்தர் சிலை வைக்க எண்ணியுள்ளனர் என்று எதிர்க்கட் சித் தலைவர் றெமிடியஸ் உறுப்பினர் கிளபோடாசியஸிடம் கேள்வி எழுப் பினார். இதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் கோரினார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தரப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது:
மாநகரசபை எச்சந்தர்ப்பத்திலும் இவ் வாறு புத்தர் சிலை வைக்க எண்ண வில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சியினர் இவ் விடயம் எதிர்காலத்தில் தேவையற்ற சிக் கல்களை ஏற்படுத்த இடம் உள்ளதாக உறு திபடக்கூறினர். அத்துடன் யாழ். மாநகர சபையின் எந்தவொரு கூட்டத்திலோ அல் லது தீர்மானத்திலோ இத்தகைய விடயங் கள் பேசப்படவில்லை. நிகழ்ச்சி நிரல் களிலும் சேர்க்கப்படவில்லை. அப்படியி ருந்தும் ஏன் இப்படிக் குறிப்பிட வேண் டும்? இந்தச் சொற்பதம் யாழ். மாநகர சபை நிர்வாகம் புத்தர் சிலை வைக்க எண் ணியுள்ளதாகத் தவறாக அர்த்தப்படுத்தி விடும். அத்துடன் அதற்கு நாங்களும் ஒத்துழைப்பு வழங்கியதாக அமைந்து விடும் என்பதையும் வற்புறுத்தினோம்.
எனவே அதை நீக்கி ""யாழ் பிரதான வீதி மடத்தடிச் சந்தியில் புத்தர் சிலை வைக்க இராணுவத்தினர் ஏற்கனவே முயற்சி எடுத்த இடத்தில் என திருத்தி உள் ளடக்க வேண்டும் என மு.றெமிடியஸ், மற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப் பின் யாழ். மாநகர சபை உறுப்பினர்களான கே.என். விந்தன் கனகரத்தினம், அ. பரஞ்சோதி, என். இராஜதேவன் உட்பட கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்க ளும் றெமிடியஸின் கருத்தை ஆதரித்துப் பேசினர்.
இதற்குப் பதில் அளித்த முதல் வர், குறித்த சொற்பதத்தை மாற்றி நீங்கள் குறிப்பிடுவதைச் சேர்க்க முடியாது, என உறுதியாக நிற்க ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஏனைய உறுப் பினர்களும் முதல்வரின் கருத்தை ஆதரித் தனர். அதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியி னருக்கும் எதிர்க்கட்சியினருக்குமிடை யில் சுமார் மூன்று மணி நேரம் கடும் வாக்குவாதமும் சொற்போர்களும் இடம் பெற்ற நிலையில் இக்கூட்டத்திலே ""பிர தான வீதியில் புத்தர் சிலை வைக்க எண்ணி யுள்ள இடத்தில்'' என்ற விடயத்தில் முதல் வரும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் இறுதி வரை விடாப்பிடியாகவே இருந்தனர்.
எவ்வித இணக்கப்பாடுமன்றி இருந்த நிலையில், முதல்வர் ""நான் கூட்டத்தில் இருந்து எழும்பிச் செல்கிறேன். நீங்கள் இயலுமானால் கூட்டத்தை நடத்திப் பாருங்கள்'' எனக்கூறிச்சென்றார். அத் தோடு இந்த மாதத்திற்கான மாதாந்தப் பொதுக்கூட்டம் தொடர்ந்து நடைபெறா மல் கலைந்துசென்றது என்றுள்ளது.

No comments:

Post a Comment