Tuesday, April 27, 2010

வடக்கு கிழக்கில் 5000 வேலைவாய்ப்புகள் : அமெரிக்கா திட்டம்


போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு பகுதிகளில் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்த அமெரிக்க அபிவிருத்தி நிறுவனம் முன்வந்துள்ளது.

சிறீலங்காவில் உள்ளுரில் இயங்கிவரும் ஐந்து தனியார் அமைப்புகளுடன் இணைந்து 5000 முழுநேர தொழில் வாய்ப்புக்களை உருவாக்க அமெரிக்க அபிவிருத்;திக்கான அமைப்பு முன்வந்துள்ளதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரியவருகிறது.

இதன்படி அமெரிக்க அபிவிருத்தி அமைப்பினால் 5.3 மில்லியன் டொலர்களும்
சிறீலங்காவின் தனியார்துறை மூலம் 1400 மில்லியன் ரூபா பெறுமதியான முதலிடுகளையும் பெற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விவசாயம்,புடவை கைத்தொழில்,அத்தியாவசிய பொருட்களுக்கான உற்பமத்தி போன்றவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்படும் எனத் தெரியவருகிறது.

No comments:

Post a Comment