Thursday, April 22, 2010

கண் "" கிளினிக் ''கில் கத்திக் குத்துக் களேபரம்; காதலர்கள் மோதியதால் நோயாளர் பீதி!



யாழ். போதனா வைத்தியசாலையில் கண் கிளினிக்கில் நேற்று கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. கத்திக்குத் துச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இருவர் முதலில் வாய்ச் சண்டையில் ஈடுபட்ட னர். அது முற்றியதால் இருவரும் மாறி மாறி ஒருவரை மற்றவர் கத்தியால் குத் தினர். கடைசியில் இருவரும் யாழ். போதனா வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தக் காதல் நாடகத்தால் சிறிது நேரம் அல்லோலகல்லோலப்பட்டது வைத்திய சாலையின் கண் கிளினிக் பகுதி.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:
யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் கிளினிக் பகுதிக்கு தென்னிலங்கை யைச் சேர்ந்த சீ.கமகே (வயது 26) என் பவர் தொழில்நுட்பவியலாளர் நியமனம் பெற்று 2 வாரங்களுக்கு முன்னர் கட மைக்கு வந்திருந்தார். அவரைச் சந்திப் பதற்காக கொழும்பு தேசிய வைத்திய சாலையில் தாதியாகப் பணியாற்றும் எஸ்.அஞ்சலி (வயது 22) என்வரும் யாழ்ப் பாணம் வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
அஞ்சலி நேற்றுக்காலை 8 மணியள வில் போதனா வைத்திய சாலையின் கண் கிளினிக் பகுதிக்கு வந்தார். அங்கு காத லன் காதலிக்கு இடையே கடும் வாக்கு வாதம் மூண் டது. இந்த வாக்குவாதம் எல்லை மீறி இருவரும் பரஸ்பரம் கத்திக்குத்தில் ஈடுபட்டனர்.
இந்தக் கத்திச் சண்டையினால் தொழில் நுட்பவியலாளரான சீ.கமகே கழுத்தில் படுகாயமடைந்தார். அவ ரது காதலியான அஞ்சலியும் கையில் காயமடைந்தார். இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இருவரும் கத்திகளை ஏந்தியவாறு தக ராறில் ஈடுபட்டமையால் கண் கிளினிக் குக்கு வந்த நோயாளர்கள் அனைவரும் பீதிய டைந்தனர். அப்பகுதி சிறிது நேரம் பெரும் அல் லோலகல்லோலப்பட்டது

No comments:

Post a Comment