Thursday, April 29, 2010

அம்பலமாகும் நித்தியின் லீலைகள்

""நித்யானந்தாவுக்கும், அவரின் தம்பி நித்தீஸ்வரருக்கும் நடந்த மோதலையும், சாமியார் தம்பிக்காக பெண்பார்த்த கதையையும் சொல் றேன்'' என தொடர்ந்தார் அந்தப் பெண்.

‘அண்ணனின் காம லீலைகளைப் பார்த்த தம்பியால் சும்மாயிருக்க முடியுமா? அவரும் ஆசை வலைகளை வீசிப் பார்த்தார். கடந்த ஆண்டு புதிதாக பிரம்மச்சாரியாக வந்த ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி கட்டிப்பிடிக்க... அந்தப்பெண், சாமியாரிடம் சொல்லிவிட்டார் அழுதபடி.

கட்டிப்பிடிக்கிற உலக உரிமை சாமியாருக்கு மட்டும்தானே. இதனால் கோபமான சாமியார் வழக்கமான வன்முறையை பிரயோகித்தார்.

அதென்ன வழக்கமான வன்முறை?

ஆசிரமத்தில் ஆணோ, பெண் ணோ.... அடங் கிப் போக மறுத் தாலோ... அல் லது நியாய மான கேள்விகளை எழுப்பினாலோ... சம்பந்தப்பட்டவரை கம்பெடுத்து விளாசுவார் சாமியார். அடி பொறுக்க மாட்டாமல் அலறினா லும் விடமாட்டார். தன் கை வலிக்கிற வரை அடித்து நொறுக்கிவிடுவார். தங்களுடைய கல்விச் சான்றிதழ் எல்லாம் சாமியாரின் லாக்கரில் சிக்கியிருப்பதால் வெளியேறவும் முடியாமல் அடிபட்டு உதைபட்டு அங்கேயே கிடப்பார்கள்.

அதே தடியடி டெக்னிக்கை தன் தம்பி மீதும் பிரயோகித்தார். ஊருக்குத் தான் சாமியார். தம்பிக்குத் தெரியாதா அண்ணனின் யோக்கிதை. கம்பை பிடுங்கிக்கொண்டு அண்ணனை தாக்க ஆரம்பித்தாலும் இறுதியில் ஜெயித்தது அண்ணன்தான். ஆமாம்... சாமியார் தாக்கினதில் தம்பியின் பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது.

அடிபட்ட பாம்பாய் சீறிய தம்பி... ‘""இப்பவே வெளி உலகத்துக்கு ஒன் னோட முகமூடிய கிழிச்சுக்காட்றேன்'' என கிளம்ப.... சாமியாருக்கு ஷாக்! சட்டென சரண்டர் ஆனார்.

""உன் பேரைச் சொல்லிக்கிட்டு எவனெவனோ இந்த ஆசிரமத்தில் எல்லா அட்டகாசமும் பண்றான். ஒன் தம்பி நான்... ஏதோ ஆசப் பட்டு ஒரு பொண்ண கட்டிப்புடிச்சது தப்பா?'' என தம்பி எரிச்ச லாக...

தம்பிக்கும் காமம் உண்டு என்பதை ஒப்புக்கொண்ட சாமியார்.... ‘""உனக்கு என் னைப் போல பக்குவம் பத்தாது. நீ இப்படி நடந்தா நம்ம ஆசிரம ரகசியங்கள் வெளியேறிடும். முதல்ல உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்'' என தம்பியை சம்மதிக்க வைத்தார் சாமியார்.

சேலத்தில் உணவு சம்பந்தப்பட்ட தொழில் செய்யும் பிரபலமானவர் அவர். சாமியாரின் பக்த வி.ஐ.பி.களில் மிக முக்கிய மானவர். அவரின் மகளை தன் தம்பிக்கு பேசிமுடிக்க ஏற்பாடு செய்தார் சாமியார்.

""என்னது... சாமியார் ஃபேமிலியில் சம்பந்தமா? எல்லாம் சாமியாரோட மகிமை. அடியே... நம்ம பொண்ணு கொடுத்து வச்சவ... உலகம் அறிஞ்ச ஒரு பிரபலத் தின் வீட்டுக்கு மருமகளா ஆகப் போறாளே...'' என சந்தோஷப்பட்டார்.

ஆசிரமத்திற்கு வந்த தொழிலதிபர் வரதட்சணை விஷயங்கள் குறித்து பேசினார் சாமியாரிடம்.

பக்தர்களின் வீட்டுக்கு வந்து ஒரு பூஜை நடத்தி விட்டுப் போக வேண்டுமானால் பூஜை சாமான்கள் மற்றும் போக்குவரத்து செலவு போக சாமியாருக்கு தனியாக ஒரு லட்ச ரூபாய் தண்டம் வைக்க வேண்டும். இப்படி பக்தி கொள்ளை அடிக்கிற சாமியார் என்ன சொன்னார் தெரியுமா?

""‘வரதட்சணையெல்லாம் வேண்டாம்.''

ஆனால் தொழிலதிபரோ... ""என் சக்திக்கு உட்பட்டு என் பொண்ணுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய் றேன் சாமி'' எனச் சொல்லிவிட்டு கிளம்பப் போனார்.

‘அந்த "சக்திக்கு உட்பட்டது' எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்துவிடும் போல இருந்தது சாமியாருக்கு.

""நாங்க வரதட்சணையை எதிர்பார்க்கல. ஆனா.. ஒங்க பொண்ணுக்கு என்ன செய்யப் போறீங்க?னு நான் தெரிஞ்சுக்கலாமா?''

‘""ஐந்து கிலோ தங்கம். அப்புறம் எவ்வளவு வெள்ளி வேணுமோ... அதன்படி செஞ்சிடுறேன்'' சொல்லிவிட்டு கிளம்பினார் தொழிலதிபர்.

சாமியாருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஆனால் அந்த சந்தோஷம் சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.

""அவரு பொண்ணத்தான கட்டிக்கச் சொல்ற? அவ ரொம்ப குண்டா இருப்பா. அதனால் எனக்கு அந்தப் பொண்ணு வேணாம். வேற பொண்ணு பாரு'' எனச் சொல்லிவிட்டார் நித்தீஸ்.

சாமியாரின் சமாதானங் கள் எடுபடவில்லை.

நாமக்கல் பகுதி கல்வித் தொழில் அதிபர் (இப்பவெல் லாம் கல்விங்கிறது தொழி லாத்தானே ஆயிருச்சு) ஒருவர் சாமியாரின் பக்தர். அவரின் மகளை தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்க திட்டமிட்ட நித்யானந்தா தன் அடிப்பொடி ஆனந்தா ஒருவரிடம் என்ன சொன்னார் தெரியுமா?

""அந்த வீட்டுப் பொண்ண கட்டிவச்சுட்டா அதன் மூலம் அந்த கல்வி நிறுவனத்தை கைப்பத்திடலாம். அத வச்சு இன்னும் பல ஊர்ல காலேஜ் கட்டி காசு பாக்கலாம்ல'' என சாமியார் ஆனந்தக் கூத்தாடினார்.

சாமியார் மேல் நிரம்ப பக்தி வைத்திருந்த அந்த கல்வி அதிபர், தன் கல்வி நிறுவனத்தின் பிளாக் ஒன்றிற்கு சாமியாரின் பேரை வச்சு அழகு பார்த்தவர். அவரிடம் சாமியார் தன் தம்பிக்கு பெண் கேட்டார். ஆனால் கல்வி அதிபரோ... ‘""சாமியார் - பக்தன் உறவு போதும் சாமி. சம்பந்தி உறவெல்லாம் வேணாம்'' என தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டார்.

சாமியாரின் இந்த திட்டமும் தவிடு பொடியானது.

திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்த ஒரு பெண்ணை தனக்கு பிடித்திருப்பதாகவும் அந்தப் பெண்ணை கட்டிவைக்கும்படியும் நித்தீஸ் சொன்னார். ஆனால் நித்யானந்தா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

காரணம்... நித்யானந்தா அந்தப் பெண்ணை பலமுறை தொட்டவர். நித்தீஸ் கைகாட்டுகிற பெண்களையெல்லாம் நித்யா மறுத்தார்.

அந்த அளவுக்கு சாமியார் கை வைத்திருந்தார். இதனாலேயே தம்பியின் கல்யாணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

இப்படி சாமியார் காம-சாம தாண்டவங்கள் ஆடி யிருந்தாலும் அவரின் ஆசை ஒன்று நிறைவேறாததில் வருத்தமோ வருத்தம். பெங்களூரைச் சேர்ந்த அழகான பெண். அந்தப் பெண்ணை அமெரிக்க ஆசிரமத்தில் நல்ல பதவி தந்து தன் ஆசைநாயகியாக வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார். இதற்காக அந்தப் பெண்ணை மூளைச் சலவையும் செய்தார்.

""நீ டிரைவிங் பழகிக்கோ. அதன் பிறகு நாம் அமெரிக்கா போய்விடலாம். நீ எப்போதும் என் அருகிலேயே இருப்பது மாதிரி... நீயே எனக்கு கார் ஓட்டலாம். அமெரிக்காவில் நீ எல்லாத்தையும் அனு பவிக்கலாம்'' என ஐடியாவும் கொடுத்தார் சாமியார்.

ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர்... ""அமெ ரிக்காவும் வேணாம்... ஆஸ்திரேலியாவும் வேணாம். ஏதோ இந்த ஆசிரமத்தப் பத்தி மக்கள் மகிமையோட பேசிக்கிட்டதால் வந்தோம். நீங்க... சின்னப் பொண்ணு மனசுல அமெரிக்க ஆசையை தூண்டாதீங்க. ஒங்களுக்கு ஒரு கும்பிடு... ஒங்க ஆசிரமத்துக்கு ஒரு கும்பிடு...'' என கிளம்பிவிட்டனர். இப்படி சாமியாரின் கால் அமுக்கு வைபவத்தில் இருந்து புத்திசாலித்தனமாக தப்பியவர்கள் கதையும் நிறைய்ய உண்டு.

ஆனால் இப்போது சாமியார் தான் தப்பமுடியா மல் மாட்டிக் கொண்டு ‘இனி ஆசிரமமே வேணாம் என மலையேறிவிட்டார்.

சாமியார் அடிக்கடி சொல்லுவார் ""ஸாஸென் என்ற ஜென் வார்த்தைக்கு ‘"சும்மா அமர்ந்திருத்தல்' என்று பொருள். இது ஒருவகை தியானம். இந்த தியானம் செய்ய கஷ்டமாக இருக்கும். அதை செய்து விட்டால் நீங்கள் உங்கள் மனதின் ஆசைகளை... மனதையே கூட வென்று விடலாம்'' எனச் சொல்லுவார்.

நீங்களும் ‘"ஸாஸென்' ஆக இருந்திருக்கலாமே. அதாவது சும்மா இருந்திருக்கலாமே சாமி!

No comments:

Post a Comment