ஊடகங்கள் மீதான அடக்குமுறை காரணமாக “அடிதடி அமைச்சர்” என கொழும்பின் ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட மோ்வின் சில்வாவை, ஊடக துணையமைச்சராக நியமித்திருப்பதற்கு, பிரான்சை தளமாகக் கொண்ட எல்லைகளற்ற ஊடக அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக கடிதம் ஒன்றை சிறீலங்காவின் புதிய பிரதமர் டி.எம்.ஜயரட்ணவிற்கு அனுப்பி வைத்துள்ள இந்த அமைப்பு, சிறீலங்கா அரசு இந்த நியமனத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
முன்னாள் துணைத் தொழிலமைச்சரும், தற்போதைய துணை ஊடக அமைச்சருமான மோ்வின் சில்வாவும், அவரது அடியாட்களும் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் பலரைத் தாக்கியதுடன், ஊடகங்களுக்குள் உள்நுழைந்து வன்முறையிலும் ஈடுபட்டதுடன், வெளிப்படையான எச்சரிக்கைகளை விடுத்திருந்தமையும் இங்கு நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment