Sunday, April 25, 2010

யாழில் படைஅதிகாரிகள் மாணவர்கள் சந்திப்பு யாழ் மாவட்டப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துர சிங்காவுக்கும் நீதிநியாயத்திற்க்கமான மாணவர் அமைப்புக்

x
யாழ் மாவட்டப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துர சிங்காவுக்கும் நீதிநியாயத்திற்க்கமான மாணவர் அமைப்புக்கும் இடையேயான சந்திப்பொன்று யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இடம் பெற்றது.

இந் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட படைகளின் உயர் அதிகாரிகள் மாணவர் அமைப்பின் பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொண்டாhகள். மாணவாகள் தற்போது எதிர் நோக்கும் பிரச்சனைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதாக கூறப்பட்டள்ளது.

குறிப்பாக வன்னியில் இருந்து இடம் பெயர்ந்த மாணவாகள் கற்றல் செயற்பாடுகள் முகாம்களில் உள்ள மாணவாகளின் நிலமைகள் பல் கலைக்கழக அனுமதி பெற்று முகாம்களில் உள்ள மாணவாகளின் தொடர் கல்வி நடவடிக்கைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டள்ளது.

மக்களது பிரச்சனைகள் மற்றும் படையினருடனான உறவுகள் குறித்து பல்கலைக்கழக மாணவர்களுடன் சந்திப்பு நடைபெறுவதாக கூறிய இராணுவ சிவில் நிர்வாக அதிகாரிகள் ஊடகவியலாளர்களை அழைத்திருந்தபோதும் மாணவர்கள் அதனை விரும்பாததையடுத்து ஊடகவியலாளர்கள் திருப்பியனுப்பப்பட்டார்கள்.

No comments:

Post a Comment