தந்தை செல்வாவின் 33வது நினைவு சிரார்த்த தினம் இன்று வடகிழக்குப் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள தந்தை செல்வா நினைவுத் தூபியில் இன்று காலையில் தந்தை செல்வா நினைவார்த்த அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
தந்தை செல்வாவின் நினைவுத்தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் அவரது சமாதியில் மலரஞ்சலியும் இடம்பெற்றிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராசா மற்றும் தமிழரசுக்கட்சியின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வில் வவுனியா மணிக்கூட்டுச்சந்திப்பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் தூபிக்கு காலையில் மலர்மாலை அஞ்சலி இடம்பெற்றது. ரம்பைக்குளம், குருமண்காடு, காளிகோவில் மற்றும் வேப்பம்குளம் கிறிஸ்தவ தேவாலயம் என்பவற்றில் வழிபாடு மற்றும் ஆராதனை நிகழ்வுகளும் இடம்பெற்றன. மாலையில் வவுனியா நகரப் பகுதியில் அஞ்சலிக்கூட்ட நிகழ்வொன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment