8 உறுப்பினர்களுடன் தற்காலிக அமைச்சரவையே நாளை பதவியேற்கும் என்று அரச வட்டாரங்களை மேற்கோள் காட்டி இணையத்தளங்கள் தகவல் வெளி யிட்டுள்ளன.
எதிர்வரும் நவம்பரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது பதவிக் காலத்துக் கெனச் சத்தியப் பிரமாணம் செய்தபின் னரே நிரந்தரமான அமைச்சரவை பதவி யேற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
38 அமைச்சர்கள் மட்டும் அடங்கிய அமைச்சரவை அமைக்கப்படுவதால், பதவியிழக்கும் ஏனைய அமைச்சர்கள், அவர்கள் ஏற்கனவே பொறுப்பில் இருந்த அமைச்சுக்களை மேற்பார்வை செய்யும் பணிகளை முன்னெடுப்பார்கள் என்றும் கூறப்பட்டது.
தனக்கு விசுவாசமான தனது பணிக ளுக்கு உறுதுணையாக நிற்பவர்களே இந் தத் தற்காலிக அமைச்சரவையில் இணைத் துக் கொள்ளப்படுவர் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளி யாகியுள்ளன.
No comments:
Post a Comment