Monday, April 26, 2010

குடாநாட்டில் கடத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்கிறார் படைத்தளபதி




யாழ்.மாவட்டத்தில் கடத்தல் சம்ப வங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனி னும் கடத்தல் சம்பவம் இடம்பெற்றால் எமக்கு அறிவிக்கும்பட்சத்தில் நடவ டிக்கை எடுக்கப்படும்.
யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜென ரல் மகிந்த ஹத்துறுசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் பரவலாகக்கடத்தப்படுவ தாக வெளிவந்துள்ள தகவல் குறித்து இணையத்தளம் ஒன்றுக்குக் கருத்துக் கூறுகையில் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். படைகளின் தளபதி மேலும் தெரிவித்துள்ளதாவது
யாழ். மாவட்டத்தில் கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுவதாக வெளிவரும் தகல்களில் எந்தவித உண்மையும் இல்லை. கடத்தல் சம்பவம் எதுவும் தொடர்பாக முறைப்பாடுகள் இதுவரை இல்லை என்றார் அவர்

No comments:

Post a Comment