Wednesday, April 21, 2010

ஜெயில் கதவு திறந்தாச்சு ; காற்றாக வருகிறார் நித்தியானந்தர்;ஏ... நான் ஜெயிலுக்கு போறேன்...ஜெயிலுக்கு போறேன் .... ஜெயிலுக்கு போறேன் ..... : நித்யானந்தா



Top world news stories and headlines detail

சிம்லா ; நடிகையுடன் உல்லாசமாக இருந்த நித்தியானந்தர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சோலன் மலைப்பகுதியில் கைது செய்யப்பட்டார். ரூ. 3 லட்சம் ரொக்கப்பணமும், வெளிநாட்டுக்கு கொண்டு செல்லும் அமெரிக்க டாலருக்கான டிராவல்லர் செக்கும் இவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இவர் இதன் மூலம் வெளிநாடு தப்பித்து செல்ல திட்டமிட்டிருந்தார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அவர் இமாச்சல பிரதேச கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவசர, அவசரமாக கர்நாடகா கொண்டு வருகின்றனர் போலீசார் .

தமிழக நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையறையில் உல்லாசமாக இருந்த நித்தியானந்தரின் வீடியோ காட்சி ஒளிபரப்பானதும் இவர்களது பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள அவரது ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நான் சட்ட ரீதியாக எவ்வித தவறும் செய்யவில்லை.

நடந்தது என்ன என்பது குறித்து நான் விரைவில் மக்களுக்கு தெரிவிப்பேன் என்றார் ஆனால் அவர் எங்கும் ,யாருக்கும் காட்சி தரவில்லை. வாரணாசியில் நடக்கும் கும்பமேளாவில் பங்கேற்க சென்றிருக்கிறேன் நான் வருவேன் என்றார்.இது வரை வரவில்லை. தலைமறைவு வாழ்க்கை நடத்தி ஒசாமா பின்லாடன் பாணியில் வீடியோ பேட்டி மட்டும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வந்தது. தியான பீட தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஆனாலும் போலீசார் இவரை விட்டபாடில்லை. குறி வைத்துகொண்டே இருந்தனர். இந்நிலையில் நடிகையுடன் உல்லாசமாக இருந்தது மற்றும் ஆசிரமத்தில் நடந்த சட்ட விரோத செயல்கள் குறித்து தமிழக போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கர்நாடக போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஜாமீ்ன் மறுப்பு : தொடர்ந்து கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆசிரமத்தில் துருவி, துருவி, ஆதாரங்களை சேர்த்தனர். இந்நிலையில் தாம் கைது செய்யப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இங்கும் அவருக்கு ஆதரவு கதவு திறக்கவில்லை. இந்நிலையில் நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என கர்நாடக போலீசார் முகர்ந்து கொண்டிருந்தனர். இன்று இமாச்சல பிரதேசத்தில் பதுங்கி இருந்த நித்தியானந்தரை போலீசார் கைது செய்தனர்.

நடிகையுடன் உல்லாசமாக இருந்த அவரை இன்று இரவே கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர். எனவே இவர் விமானத்தில் கொண்டு வரப்படலாம் என தெரிகிறது. ஆனாலும் இவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் கஸ்டடியில் வைத்து தீவிர விசா‌ரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

நடிகை ரஞ்சிதா கைது எப்போது ? : நடிகையுடன் உல்லாசமாக இருந்ததே நித்தியானந்தரின் வழக்கில் முக்கிய குற்றமாக கருதப்டுகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்டு 45 நாட்கள் கழித்து ஒருவாறாக நித்தியானந்தரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நடிகை ரஞ்சிதாவும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஞ்சிதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது தற்போதைய கேள்வி.

வீடியோ மூலம் நித்தியானந்தா சொன்னது என்ன ? : வீடியோவில் பேசியதாவது: நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை.நானோ எனது தியான பீடமோ எவ்வித தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. எனது சோதனையான இந்த காலக்கட்டத்தில் எனது சிஷ்யர்கள், எனது நல விரும்பிகள் எனக்கு உலகம் முழுவதும் பக்கப்பலமாக இருந்து வருகின்றனர். இந்த சோதனையான காலத்தில் வெளிநாடுகளில் இருந்து எனக்கு இ மெயில் மூலம் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நான் கடந்த பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் நல் வித்துக்களை பரப்பியுள்ளேன். இதன் காரணமாக எனக்கு இந்த ஆதரவு இருக்கிறது. ஆணித்தரமாக சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். நான் சட்ட ரீதியான எவ்வித தவறும் செய்யவில்லை. எனது மீதான குற்றச்சாட்டுகள், வதந்திகள் ஆகிய எல்லாவற்றுக்கும் எனது ஆதாரங்கள் திரட்டி வருகிறேன். திரட்டிய பின்னர் நான் உங்கள் முன்பு திறந்து வைக்கிறேன் இவ்வாறு கூறியுள்ளார். இந்த வீடியோ சி.டி.,க்கள் தியான பீடத்தின் மூலமாக பல செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவர் மீது எந்த எந்த பிரிவுகளில் வழக்கு: நித்தியானந்தர் மீது பிடாதி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட எஸ். பி., பிசனாகலி கூறியதாவது: சேலம் ஆத்தூரை சேர்ந்த லெனின் என்பவர் மூலம் தமிழக போலீசார் அனுப்பிய தகவல் படி நித்தியானந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செக்ஷன் 420 ( மோசடி ) , 376 ( கற்பழித்தல் ) , 377 ( முறையற்ற உடலுறவு ) , 506 ( பி ) (மிரட்டல்) , 120 ( பி) ( குற்ற செயல்களுக்கு உடந்தையாக இருத்தல் ) , 295 ( ஏ) , உள்ளிட்ட பிரிவின் கீழ் நித்தியானந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 comments:

  1. ahaa:much ado about nothing!
    MK has so many wives
    JJ has (had) so many boy friends
    who will areest them?

    ReplyDelete
  2. @ttpian: Your 100% right

    @Tamilkili: Superp... keep it up

    ReplyDelete