Thursday, May 20, 2010

திருமலை தொடருந்து நிலையத்தில் விபத்து! 2 தொடருந்துப் பெட்டிகள் பலத்த சேதம்

திருமலை தொடருந்து நிலையத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் இரண்டு தொடருந்துப் பெட்டிகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன.
இன்று மாலை 3:20 மணிக்கு தொடருந்துப் பெட்டிகளை இணைக்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த பொழுது, தொடருந்தின் இயந்திரத்தை செலுத்திச் சென்ற உதவிச்சாரதியின் கட்டுப்பாட்டை மீறிப் பெட்டிகள் மீது இயந்திரப் பகுதி மோதியுள்ளது.

இதனால் கொழும்புக்கும் திருமலைக்கும் இடையிலான தபால் தொடருந்து சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment