Sunday, May 23, 2010

இந்திய - இலங்கை உறவுகளை கையாளும் பொறுப்பு பஸிலிடம்


.


இந்திய இலங்கை உறவுகளைக் கையாளும் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பொரு ளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜ பக்ஷவிடமே ஒப்படைத்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய இலங்கை உறவுகள் தொடர் பான விடயங்களைக் கவனிக்கும் பொறுப்பு தொடர்ந்தும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடமே வழங் கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சராக ஜி.எல். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் பஸில் ராஜபக்ஷவே இந்திய விடயங் களைக் கவனிப்பார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இறுதி விஜயத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக கடந்த வாரம் பஸில் ராஜபக்ஷ புதுடில்லி செல்லவிருந்தார்.
எனினும் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கு ஜனாதிபதி தடை விதித்துள்ளமையால் பஸில் ராஜபக்ஷ புதுடில்லி செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது

No comments:

Post a Comment