Sunday, May 23, 2010

கதிர்காமம் பிள்ளையார் கோவில் பௌத்த பிக்குகளின் கட்டுப்பாட்டில்?

கதிர்காமத்தில் அமைந்திருக்கும் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தை பௌத்த பிக்குகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு சிங்கள அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் சிங்களப் பிரதமர் டி.எம்.ஜெயரட்ணவின் தலைமையிலான பௌத்த சாசன அமைச்சு ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை ஆட்சேபித்து மட்டக்களப்பு கல்லடியை சேர்ந்த சுவாமி யோகி சிறீசிவச்சந்திரன் என்ற சைவப் பூசகரால் மாத்தறை மாவட்ட மேல்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment