Sunday, May 23, 2010

மன்னாரில் கிளைமோர் குண்டு மீட்பு







மன்னார் மூர்வீதி காட்டுபல்லி பகுதியில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் இருந்து புதைக்கப்பட்ட நிலையில் 1 கிலோ நிறையுடைய கிளைமோர் குண்டு ஒன்றை இன்று முற்பகல் 11 மணியளவில் மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பிரதேசவாசி ஒருவர் வழங்கிய தகவலையடுத்து கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இந்த கிளைமோர் குண்டு பொலித்தின் மற்றும் பெற்றரிகள் பொருத்தப்பட்ட நிலையில் இருந்ததாகவும் அவ்விடத்துக்கு வந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் அந்த கிளைமோர் குண்டினை செயலழிக்கச் செய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர் .

அக் குண்டு 2006 ஆம் ஆண்டு புதைக்கபட்டிருக்கலாம் என்று தெரியவருகின்றது .

No comments:

Post a Comment