Monday, May 17, 2010

இறந்தோரின் நினவுதினத்தைச் சீர்குலைக்கும் துண்டுப் பிரசுரம் : வவுனியாவில் வெளியீடு







வன்னியில் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நினைவு தின நிகழ்வைச் சீர்குலைக்கும் வகையில் 'மக்கள் பாதுகாப்பு இயக்கம்' என்ற பெயரில் துண்டுப் பிரசுரம் ஒன்றுவெளியிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்..

அந்தக் துண்டுப் பிரசுரத்தில், .

"எதிர்வரும் 17 ஆம் திகதி புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டுத் தமிழ் மக்கள் விடுதலை பெற்ற நாள். எனவே இந்தத் தினத்தை, தமிழ் மக்கள் இறந்த தினமாகக் கூறி ஒரு சில தீயசக்திகள் துக்கம் அனுஷ்டிப்பு வாரம் எனப் பிரகடனப்படுத்தி, வியாபார நிலையங்களை மூடி ஹர்த்தால்களையும் ஊர்வலங்களையும் அஞ்சலிக் கூட்டங்களையும் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. .

தமிழ் மக்கள் மரணித்ததை நினைவுகூருவதென்றால் வேறு தினத்தில் அதனை அனுஷ்டிக்க முடியும். ஆனால் தமிழ் மக்களை பல வருடங்களாகத் துன்புறுத்திய புலிகள் கொல்லப்பட்ட தினத்தை அனுஷ்டிக்கும் நோக்கத்துடனேயே அவர்கள் செயல்படுகிறார்கள். இவ்விடுதலையின் பின், எமது மக்கள் தற்போது மீள் குடியமர்த்தப்பட்டு வருவதோடு அமைதியாகவும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் புது வாழ்க்கையை ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளனர்..

எனவே, இந்தச் சதி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி எமது தமிழ் மக்களை மேலும் கஷ்டப்படுத்த முயற்சித்தால் நீங்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவீர்கள் எனக் கவலையுடன் அறியத் தருகின்றோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment