யாழ்.உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொறில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலுமொருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளொன்றும் டிரக்டர் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதை அடுத்தே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த யாழ்ப்பாணம் முஸ்லிம் வீதியைச் சேர்ந்த ஜுனைத் அனீஸ் (வயது 42) என்பவரே உயிரிழந்தவராவார். விபத்தின்போது காயமடைந்த மற்றைய நபர் சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment