பட்டப்பகலில் வீட்டில் எவரும் இல் லாத சமயம் யன்னல் உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் அலுமாரியில் பாதுகாப் பாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் 7 லட்சம் ரூபா பெறுமதியான 25 தங்கப் பவுண் எடையுள்ள நகைகளையும் 15 ஆயி ரம் ரூபா பணத்தையும் மற்றும் பெறுமதி வாய்ந்த பொருள்களையும் திருடிச் சென் றுள்ளனர்.
மானிப்பாயைச் சேர்ந்த ஆசிரியர் விஜ யகாந் என்பவரின் வீட்டிலேயே இத்துணி கரமான பகல் திருட்டு இடம்பெற்றுள் ளது.
ஆசிரியர்களாகக் கடமையாற்றும் கண வனும் மனைவியும் நேற்றுமுன் தினம் காலை கல்லூரிக்குச் சென்றுவிட்டனர். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய திரு டர்கள் வீட்டின் பின்புறத்தில் உள்ள ஜன் னல் கதவை உடைத்து உள்ளே சென்று பாதுகாப்பாக அலுமாரியில் வைக்கப்பட் டிருந்த சங்கிலி,காப்பு உட்பட சுமார் 25 பவுண் தங்க நகைகளையும் 15 ஆயிரம் ரூபா பணத்தையும் விலை உயர்ந்த பொருள்களையும் திருடிச் சென்றுள்ளனர். இதுபற்றி மானிப்பாய் பொலிஸில் புகார் செய்ததைத் தொடர்ந்து பொலிஸார் விசா ரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மானிப்பாய் மகளிர் கல்லூரியில் உப அதிபராகக் கடமை புரியும் திருமதி விஜய காந் கல்லூரிக்குச் செல்லும் போது தாலிக் கொடியை அணிந்த சென்றபடியால் அது திருடர்களின் கைவரிசையில் இருந்து தப் பிக் கொண்டது.
Thursday, May 13, 2010
ஆள்களற்ற வீட்டில் ஜன்னல் உடைத்துக் கொள்ளை; 7 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மாயம்
2
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment