Thursday, May 13, 2010

ஸ்ரீ டெலோ உறுப்பினர் எரிகாயங்களுடன் மீட்பு







ஸ்ரீ ரெலோ அமைப்பின் உறுப்பினர் ஒருவர் பலத்த எரிகாயங்களுடன் மன்னார், தலைமன்னார் வீதியின் 2 ஆம் கட்ட சந்தியில், உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

. மேற்படி அமைப்பின் உறுப்பினர் சயந்தன் (வயது 25) என்பவரே இவ்வாறு எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், பொலிஸார் இவரை உயிருடன் மீட்டுள்ளனர். இவர் தற்போது மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அதேவேளை, கடந்த செவ்வாக்கிழமை ஸ்ரீ ரெலோ அலுவலகத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, சயந்தன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மன்னார் பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment