Tuesday, May 18, 2010

இராணுவ யுத்த வெற்றிகளை கொண்டாட மக்களுக்கு ஈடுபாடு இல்லை- சிவாஜிலிங்கம்







கடந்த காலத்தில் காணப்பட்ட பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இராணுவ வெற்றியை கோலாகலமாகக் கொண்டாட மக்களுக்கு பெரிதும் ஈடுபாடு இல்லலை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் எமது இணையதளத்துக்கு தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் இன்னமும் மீள்குடியேற்றங்கள் சரியான முறையில் பூர்த்தியாகவில்லை. எனவே இங்குள்ள மக்கள் இன்னமும் கண்ணீர் கவலையுடனே இருக்கின்றனர். இந்நிலையில் இராணுவ யுத்த வெற்றிகளை கொண்டாட மக்களுக்கு ஈடுபாடு இல்லை என மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment