இலங்கையில் சட்டத்திற்கு புறம்பான கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம், கொழும்பு நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார்.மேற்படி அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி சேனுகா செனவிரத்னவிடமிருந்து பெற்றுச் சமர்ப்பிக்குமாறும் கொழும்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
இலங்கையில் சட்டத்திற்கு புறம்பான கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பான்கீமூன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment