கிளிநொச்சி நகரில், கணேசபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனி தப்புதைகுழி எனச் சந்தேகிக்கப்பட்ட மலசலக்கூட குழியில் இருந்து நேற்று ஐந்து சடலங்கள் கறுப்புப் பொலித்தீனால் சுற் றிக் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி, ஜூன் 01
கிளிநொச்சி நகரில், கணேசபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனி தப்புதைகுழி எனச் சந்தேகிக்கப்பட்ட மலசலக்கூட குழியில் இருந்து நேற்று ஐந்து சடலங்கள் கறுப்புப் பொலித்தீனால் சுற் றிக் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மனிதச் சட லங்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்ட மலசலகூடக் குழியைத் தோண்டிப் பார்க்கும் அதில் போடப்பட்டிருந்த மணல், குப் பைகள் போன்றவற்றை அகற்றும் பணி நேற்றுக் காலை ஆரம் பமானது.
கிளிநொச்சி நீதிவான் பெ.சிவகுமார், வவுனியா வைத்திய சாலை சட்டவைத்திய அதிகாரி எஸ்.சிறீதரன், கிளிநொச்சி, மாங்குளம் ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரி கள், படை அதிகாரிகள், கணேசபுரம் பிரதேச கிராமசேவையா ளர் எஸ்.காண்டீபன் ஆகியோரின் பிரசன்னத்தில் சடலங்கள் மீட்கப்பட்டன.
காலை 9.45 மணிக்கு ஆரம்பமான சடலங்களைத் தோண்டி எடுக்கும் பணி இரண்டு மணி நேரம் நீடித்தது.
கனரக வாகனங்களைக் (பெக்கோ) கொண்டு தோண்டும் நடவடிக்கையை மேற்கொண்டால், மலசலகூடத்துடன் இணைந்துள்ள வீடு சேதமடையும் என்பதால், மலக்குழிக்குள் மண்வெட் டிகளுடன் சிலர் இறக்கப்பட்டுச் சடலங் கள் வெளியே எடுக்கப்பட்டன.
கறுப்புப் பொலித்தீனில் சுற்றப்பட்ட நிலையிலேயே அந்த ஐந்து சடலங்க ளும் மீட்கப்பட்டன.
இரண்டு சடலங்கள் விடுதலைப் புலிகளின் வரி கொண்ட சீருடைகள் அணிந்த நிலையிலும்
ஒரு சடலம் இராணுவச் சீருடையைப் போன்று தோற்றம் அளிக்கும் உடையு டனும்
மற்றிரு சடலங்கள் நிர்வாண நிலை யிலும் மீட்கப்பட்டுள்ளன.
நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட சட லங்களில் ஒன்றின் கால் முறிந்து பனை மட்டை கட்டப்பட்ட நிலையிலும், மற் றைய சடலம் கால் முறிந்து பலகை கட் டப்பட்ட நிலையிலும் மீட்கப்பட் டுள்ளன.
இந்தச் சடலங்கள் மிக மோசமாகச் சிதைந்து காணப்பட்டதால், ஆணா, பெண்ணா என உடனடியாக அடையா ளம் காணமுடியாது இருப்பதாகச் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
மேலதிக பரிசோதனைகளுக்காகச் சடலங்கள் வவுனியா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment