Tuesday, May 25, 2010

யாழ்.குடாவில் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு நகைகள் கொள்ளை

வீட்டுக்குள்ளிருந்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு அவரது நகைகளை திருடர்கள் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவமொன்று யாழ்ப்பாணம், நாவலர் வீதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த குறித்த பெண், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment