தமிழீழ மக்களை வகைதொகையின்றி கொன்றுகுவித்து நரபலி வேட்டையாடிய சிங்கள அரசின் முகத்தில் ஓங்கியறையும் வகையில் அனைத்துலக இந்திய திரைப்பட விழாவை முற்றுமுழுதாகப் புறக்கணிப்பதற்கு தமிழக திரையுலகம் முடிவு செய்துள்ளது.
அத்துடன், தமது ஆட்சேபனைகளை மீறி கொழும்பில் இடம்பெறும் அனைத்துலக இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் சகல இந்திய நடிகர் – நடிகைகளின் திரைப்படங்களும் தமிழகத்தில் திரையிடப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என்றும் தமிழக திரையுலகத்தினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்புக்கு வருகை தந்து அனைத்துலக இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ளுமாறு நடிகர் ரஜனிகாந்த் அவர்களுக்கு சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ச இரகசிய அழைப்பிதல் அனுப்பியிருந்த பொழுதும், அதனை நடிகர் ரஜனிகாந்த் அவர்கள் தூக்கியெறிந்திருப்பதோடு, இதேபோன்ற தீர்மானத்தை நடிகர் கமலஹாசன் உட்பட முன்னணி தமிழக திரையுலகத்தினர் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment