Tuesday, May 25, 2010

யாழில் போக்குவரத்து விதிமுறைகளை அமுல்படுத்த பொலிஸாருக்கு உத்தரவு

யாழ். மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக அமுல்ப்படுத்துமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஸ் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் அங்கு இடம்பெறுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

யாழ. மாவட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் காமினி டி சில்வா, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பத்மதேவ ஆகியோருடனான சந்திப்பின் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாரான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment