Tuesday, May 18, 2010

திடீர் மழையினால் குடாநாட்டில் நேற்றிரவு மின்சாரம் தடைப்பட்டது; போக்குவரத்தும் பாதிப்பு





திடீரென உருக்கொண்ட காற்றுடன் கூடிய சுமாரான மழை காரணமாக நேற் றிரவு குடாநாட்டுக்கான மின்விநியோகம் முற்றாகத் தடைப்பட்டுள்ளது. வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்து மக்கள் போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டது.
திடீர் காற்றும் மழையும் குடாநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பாதிப் புக் களைத் தந்ததாக உதயனின் பிரதேசச் செய்தியாளர்கள் அறியத்தந்தனர்.
மழை காரணமாகக் குடாநாட்டின் பிர தான வீதிகளில் நீர் தேங்கிக் காணப்பட் டது. கடும் காற்றினால் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் சில வீதிகளும் தடைப்பட்டன.
இதேவேளை யாழ். நகர்ப்பகுதியில் வைத்தியசாலைக்கான மின்விநியோகம் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டதுடன், ஏனைய பகுதிகளுக் கான மின் விநியோகம் இன்று காலையே சீர்செய்யப்படும் என சுன்னாகம் மின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. மின் விநியோகம் தடைப்பட்டதால் மக்கள் பெரும் இடையூறுகளைச் சந்தித்துள் ளனர்.

No comments:

Post a Comment