Thursday, May 20, 2010

யாழ் குடாநாட்டில் கத்தோலிக்க குருக்களுக்கு சிறீலங்கா படைகள் கொலைமிரட்டல்!

வன்னிப் போரில் சிங்களம் காவுகொண்ட ஒன்றரை இலட்சம் உறவுகளுக்கான வணக்க நிகழ்வுகளை யாழ் குடாநாட்டில் முன்னெடுக்க முற்பட்ட கத்தோலிக்க குருக்களுக்கு சிறீலங்கா படைகளால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இதனையும் மீறியும் யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை மக்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

இது குறித்து கருத்துரைத்திருக்கும் யாழ் மறை மாவட்ட ஆயர் தொமஸ் சவுந்தரநாயகம் அடிகளார், கத்தோலிக்க குருக்களை மிரட்டியதன் மூலம் தமது சுயரூபத்தை சிறீலங்கா படையினர் காண்பித்திருப்பதாக கண்டனம் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment