Wednesday, May 12, 2010

நாளை கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்







கொழும்பு கொம்பனித்தெருவில் வீடுகள் உடைக்கப்பட்டதை எதிர்த்து நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு வேகந்த பள்ளிவாசல் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது.

கொழும்பு குடியிருப்புகள் பாதுகாப்பு மன்றத்தின் ஏற்பாட்டிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக இம்மன்றத்தின் அமைப்பாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஷரப்தீன் கருத்துத் தெரிவிக்கையில்,

"அரசாங்கத்தின் அடக்குமுறைக்குத் தொடர்ந்தும் இடமளிக்க முடியாது. இன்று கொம்பனித் தெருவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடுடைப்பு நாளை கொழும்பு முழுவதிலும் வியாபிக்கும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

எனவே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே நாளை வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பின்னர் வேகந்த பள்ளிவாசல் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்" என்றார்.

No comments:

Post a Comment