Thursday, May 20, 2010

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் யாழ்.மேயரையும் அவரது செயலரையும் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்ய உத்தரவு




நீதிமன்றத்தை அவமதித்ததாக சுமத் தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக யாழ். நகர மேயர் திருமதி ப.யோகேஸ்வரி, மேயரின் செயலாளர் கு.பற்குணராஜா ஆகியோரை இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு யாழ். குற்றப்புலனாய் வுப் பொலிஸாருக்கு யாழ். நீதிவான் நீதிமன் றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத் தில் உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரித்தமை தொடர்பாக யாழ். குற்றத் தடுப் புப்பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணைகள் குறித்த அறிக்கை யாழ்.
நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கையை ஆராய்ந்த நீதி மன்றம், யாழ். மேயர் திருமதி ப. யோகேஸ் வரியை நீதிமன்றத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு ஆஜர் செய்யுமாறும்
மேயரின் செயலாளரான கு.பற்குண ராஜாவின் வாக்குமூலத்தைப் பெற்று அவ ரையும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யுமா றும் குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் யாழ். மாவட்டத்தில் இருந்து வெளிவரும் "உதயன்', "யாழ். தினக்குரல்', "வலம்புரி' ஆகிய பத்திரிகைகளின் ஆசிரி யர்களை, அவற்றில் வெளியான விளம் பரங்களின் மூலப்பிரதிகளுடன் நீதிமன் றத்தில் பிரசன்னமாக இருக்க ஏற்பாடு செய்யுமாறும் நீதிமன்றம் யாழ். குற்றப் புலனாய்வுப் பொலிஸாருக்கு உத்தரவிட் டுள்ளது.

No comments:

Post a Comment