Monday, May 17, 2010

குமரப்பா உட்பட்ட பன்னிரு வேங்கைககளின் நினைவாலயங்களும் படையினரால் அழிப்பு

யாழ்.மாவட்டம் வடமராட்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வல்வெட்டித்துறை, தீருவிலில் அமைந்துள்ள குமரப்பா, புலேந்திரனினதும், தளபதி கிட்டுவினதும் நினைவாலயங்களையும் சிறீலங்கா இராணுவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு சேதப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலங்களில் வட பகுதியில் உள்ள மாவீரர்களின் நினைவுச் சின்னங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சிறீலங்கா இராணுவத்தினர் அதன் ஒரு அங்கமாக வல்வெட்டித்துறை, தீருவிலில் அமைந்துள்ள குமரப்பா உட்பட்ட பன்னிரு வேங்கைகளினது நினைவாலயங்களையும், கேணல் கிட்டுவின் நினைவுத்தூபியினையும் முற்றாக அழிக்க தீர்மானித்துள்ளதாகவும், அதில் ஒரு கட்டமாக நேற்றிரவு அவைகளை சேதப்படுத்தியுள்ளதாக அங்கிருந்த கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அண்மையில் வடமராட்சியில் இருந்த மாவீரர் துயிலும் இல்லத்தை சிறீலங்காஇராணுவம் முற்றாக அழித்துள்ளமை யாவரும் அறிந்ததே.

இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்று இரவு தீருவில் பகுதியில் அமைந்திருக்கும் இந்த நினைவுத் தூபிகள் இடிக்கப்பட்டுள்ளன.


நன்றி: சங்கதி

No comments:

Post a Comment