Friday, May 14, 2010

உடுவிலில் வெட்டுக் காயங்களுடன் குற்றுயிராக இளம்பெண் மீட்பு!


யாழ் வலிகாமம் உடுவில் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் குற்றுயிராக இளம்பெண் ஒருவரை உறவினர்கள் மீட்டுள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) நண்பகல், உடுவில் மல்வம் பகுதியில் உள்ள தனது வீட்டின் பின்புறத்தில் நாய்க்கு உணவு வைப்பதற்காக சென்ற கலைவாணி (அகவை 19) என்ற பெண், நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில் அவரைத் தேடிச் சென்ற குடும்பத்தினர், தமது வீட்டிற்கு பின்புறமாக உள்ள பிறிதொரு வீடொன்றில் இருந்து இவரைக் குற்றுயிராக மீட்டுள்ளனர்.

கைகள், கால்கள் கட்டப்பட்டு, கழுத்து நெருக்கப்பட்டு, வாயில் துணியால் கட்டப்பட்ட நிலையில் வெட்டுக்காயங்களுடன் இவர் காணப்பட்டுள்ளார்.

இவர் வழங்கிய வாக்குமூலத்தின்படி, தனது வீட்டிற்குப் பின்புறமாக மறைந்திருந்த இரண்டு பேர் தன்னை பிடித்துசென்று, மயக்க மருந்து கொடுத்துப் பின்னர் கைவிட்டுச் சென்றதாகவும், மயக்கமுற்ற நிலையில் என்ன நடந்தது என்பது தனக்குத் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ் குடாநாட்டில் அண்மைக் காலங்களில் சிங்களக் குண்டர்களினதும், ஈ.பி.டி.பி போன்ற சமூக விரோதக் கும்பல்களினதும் அட்டூழியங்களும் அடாவடித்தனங்களும், சமூக சீர்கேடுகளும் அதிகரித்து வருகின்றமை சுட்டிக் காட்டத்தக்கது.

No comments:

Post a Comment