யுத்த காலத்தில் முற்றாக அழிக்கப்பட்ட கிளிநொச்சி மின்நிலையத்தை மீள் நிர்மாணம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அமைச் சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக் வெல தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் 132 133 மெகா வோட்ஸ் மின்சாரத்தை தேசிய பாவ னைக்காக விநியோகிக்க முடியும் என்றும், இத்திட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மின்
சார விநியோகப் பிரச்சினை தீர்க்கப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இரண்டு கட்டங்களாக முறையே 1.17 மில் லியன் ரூபா, 1.79 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் அடுத்த வருடம் மே மாதம் பூர்த்திசெய்யபடும் என்றும் இந்தப் பணிகள் முடிவடைந்ததும் தேசிய இணைப்புடன் வடக்கின் மின் விநியோகம் இணைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Thursday, May 13, 2010
கிளிநொச்சியில் மின்நிலையம்; அமைச்சரவை அங்கீகாரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment