இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவொன்று ஐ.நா படையுடன் இணைந்து பணிபுரிவதற்காக மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் சாட் ஆகிய நாடுகளுக்கு விரைவில் புறப்பட்டுச் செல்லவுள்ளது.
மூன்று அதிகாரிகள் உட்பட மொத்தம் 61 பேர் இந்தப்படைப்பிரிவில் அங்கம் வகிக்கவுள்ளனர் எனப் பாதுகாப்பு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை இராணுவப் பிரிவொன்று மத்திய ஆபிரிக் காவுக்குச் செல்வது இதுவே முதற் தட வையாகும்.
இலங்கை இராணுவத்தின் தொழிற்சார் தகைமை மற்றும் அதன் திறமை என்பனவற்
றுக்கு ஐ.நா வழங்கியுள்ள அங்கீகாரமாகவே இது கருதப்படுவதாக இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, May 25, 2010
மத்திய ஆபிரிக்கா, சாட் நாடுகளுக்கு இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment