Tuesday, May 25, 2010

வவுனியா தாண்டிக்குளத்தில் வாகன விபத்து ஒருவர் பலி; ஏழு பேர் படுகாயம்

திருமண வைபவமொன்றில் கலந்துகொண்ட உறவினர்கள் சிலர் பயணித்த வானொன்று வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர், குறித்த திருமண வைபவத்தை வீடியோ ஒளிப்பதிவு செய்த நாவாந்துரையைச் சேர்ந்த எம்.யேசுநேசன் (வயது 36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற மேற்படி திருமண வைபவத்தில் கலந்துகொண்டுவிட்டு, கொழும்பிலிருந்து யாழ்.நோக்கிப் பயணிக்கும் போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இன்று அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றஇந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரு சிறுவர்களும் அடங்குவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment