Thursday, May 13, 2010

ஐதேக தலைவராக சஜித் பிரேமதாச?







ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைவராக மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச நியமிக்கப்படக் கூடும் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனை மேலும் உறுதிப்படுத்துவதற்கான நிகழ்வொன்றை இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இன்றைய ஊடகவியலார் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கட்சியின் அடுத்த தலைவராக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களைக் குறிப்பிட முடியுமா என ஊடகவியளார் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,

"பெரும்பாலும் சஜித் பிரேமதாசவின் பெயரை மட்டுமே இப்போதைக்கு சொல்லக் கூடியதாக உள்ளது" என்றார்.

No comments:

Post a Comment