Wednesday, May 12, 2010

பருத்தித்துறை படையினரின் முகாமினுள் குண்டு வெடிப்பு


புதன்கிழமை காலை 4.30 மணியளவில் வடமராட்சி பருத்தித்துறையில் அமைந்துள்ள சிறீலங்காவின் 524 வது படைப்பிரிவினரது முகாமினுள் குண்டுகள் வெடித்ததுடன் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் கேட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதற்கு மின்ஒழுக்கால் ஏற்பட்ட விபத்தே காரணம் என படையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை படையினர் தமது பாதுகாப்பினை புதன்கிழமை காலை பலப்படுத்தியிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இவ் வெடிச்சத்தத்தையடுத்து இப்பிரதேச மக்கள் பெருத்த அச்சத்துடன் காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.

எனினும் இதன்போது படையினருக்கு ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பாக எதுவித தகவலும் வெளியிடப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment