Friday, May 14, 2010

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி தெரிவில் நாமல் ராஜபக்சவின் தலையீடுகள் அதிகரித்துள்ளது

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி தெரிவில் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்சவின் தலையீடுகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணி தலைவர் குமார் சங்ககார தனது தலைமை பதவியில் இருந்து இராஜினாமாச் செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்சவின் நெருங்கிய சகாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜெயசூரியவை தொடர்ந்து கிரிக்கெட் அணியில் இடம்பெறச் செய்வதில் நாமல் ராஜப்ச அதி ஆர்வம் காட்டி வருகின்றார்.

உரிய உடல் தகுதியும் விளையாடும் திறனும் அற்ற நிலையில் உள்ள சனத் ஜெயசூரியவிற்கு தொடர்ந்து வாய்பு வழங்கப்படுவதால் அணியில் உள்ள இளம் வீரர்களும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இதன் காரணமாவே குமார் சங்ககார தலைமை பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

No comments:

Post a Comment