Tuesday, May 18, 2010

புலிப் பிரமுகர் கல்கிசையில் கைது!



தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப் பின் முன்னாள் முக்கிய பிரமுகர் ஒருவர் கல்கிசையில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தெரி விக்கப்படுகிறது. ஸ்ரீதரன் ஐங்கரன் என்ற இந்த நபர், கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தில் காய மடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவுக்குப் புறப்படத் தயாராக இருந்த
நிலையிலேயே கல்கிசையில் வைத்து இவர் கைதுசெய்யப்பட்டார் என்றும் இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment