முன்னாள் விடுதலைப் புலி உறுப் பினர்கள் 600பேர்களை இன்று அவர்களது பெற்றோர்களிடம் கையளிக்கும் நிகழ்வு முற்பகல் 10மணிக்கு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ்.சிவில் நிர்வாக பொதுமக்கள் உறவுகள் அலுவலகம் நேற்றிரவு இத்தகவ லைத் தெரிவித்தது,
படையினரிடம் சரணடைந்த மற்றும் படையினரால் கைது செய்யப்பட்ட 600க்கும் மேற்பட்டவர்கள் புனர்வாழ்வு நிலையங் களில் வைத்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின் சமுதாயத்தில் ஒன்றிணைந்து வாழ் வதற்காக விடுவிக்கப்படவுள்ளனர் என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.
தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியும் புத்தரின் போதனைக்கு அமைய சமூகத் தில் நல்ல பிரஜைகளாக வாழ வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் விடுதலையா கும் விடுதலைப்புலிகளின் ஆண், பெண் உறுப்பினர்கள் தேசியக் கொடியை தமது வீடுகளில் ஏற்றவேண்டும் என்று சிவில் நிர்வாக பொதுமக்கள் உறவுகள் அலு வலக அதிகாரி கேட்டுள்ளார்
Monday, May 17, 2010
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து முன்னாள் புலி உறுப்பினர்கள் 600 பேர் இன்று அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment